வலை ஓலை - எழுத்தாணி - சொல்
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின.
தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன்.
காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.
தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.
அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை. இந்த மூன்றிலும் தமது பதிவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் அனைவருக்கும் முனைப்பு இருக்கும்.
இதற்கு கடும் போட்டி நிலவியது. அதிலும் பலர் 'த.ம 1' என கருத்துரை இடுவார்கள். அதாவது தமிழ்மணத்தில் முதலாவது வாக்கு என்பதே அது. தமிழ்மணம் பல பதிவர்களின் பெருங்கனவாகத் திகழ்ந்தது.
தமிழ்மணத்தில் ஒவ்வோர் ஆண்டும் முதல் 100 வலைத்தளங்களின் பெயர்ப்பட்டியல் தனியாக இணைக்கப்படும். அந்த 100க்குள் வருவதற்கு கடும்போட்டி நிலவியது. முன்னணி வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளுக்கு தனி மதிப்பு இருந்தது.
அந்த வசந்த காலம் மீண்டும் வருமா?
அந்த வசந்த காலத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது என்பது கடினம். ஆனால் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
ஆம்.
அந்த முயற்சியை நாம் முன்னெடுத்துள்ளோம். உருவாகியுள்ளது 'வலை ஓலை' வலைத்திரட்டி.
இந்த வலைத் திரட்டியில் இதுவரை 41 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 100 வலைத்தளங்கள் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் விரைவில் இணைப்போம். குறைந்தது 250 வலைப்பதிவுகளை இணைக்க எதிர்பார்த்துள்ளோம். அதிகபட்சமாக 1000 வலைத்தளங்களையாவது இணைக்க வேண்டும் என்பது எமது அவா.
ஆனால் ஒரு சிறு குறை. எமது 'வலை ஓலை' வலைத் திரட்டியின் பயன்பாடு வலைப்பதிவர்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது. எந்த அளவுக்கு அதிகமாக திரட்டியை பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான ஈடுபாட்டுடன் 'வலை ஓலை' வலைத் திரட்டியின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
ஆகவே வலைத் திரட்டியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைத் திரட்டியின் நிறை, குறைகளை பதிவுகளாக வெளியிட்டு விவாதியுங்கள். அப்போது தான் தவறுகளைத் திருத்தி முன்னேற முடியும். எழுத்து தானே நமது ஆயுதம்?
நாம் இன்னுமின்னும் நூற்றுக்கணக்கான புதிய தலைமுறை வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு நமது ஒற்றுமை அவசியம். அதற்காகவே புதிய வலைத்திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
வாருங்கள் - புதுயுகம் படைப்போம்....!
(பேசுவோம்...)
வலை ஓலை - எழுத்தாணி - சொல்
https://newsigaram.blogspot.com/2020/04/valaioalai-ezhuthani-sol-01.html
காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.
தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.
அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை. இந்த மூன்றிலும் தமது பதிவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் அனைவருக்கும் முனைப்பு இருக்கும்.
இதற்கு கடும் போட்டி நிலவியது. அதிலும் பலர் 'த.ம 1' என கருத்துரை இடுவார்கள். அதாவது தமிழ்மணத்தில் முதலாவது வாக்கு என்பதே அது. தமிழ்மணம் பல பதிவர்களின் பெருங்கனவாகத் திகழ்ந்தது.
தமிழ்மணத்தில் ஒவ்வோர் ஆண்டும் முதல் 100 வலைத்தளங்களின் பெயர்ப்பட்டியல் தனியாக இணைக்கப்படும். அந்த 100க்குள் வருவதற்கு கடும்போட்டி நிலவியது. முன்னணி வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளுக்கு தனி மதிப்பு இருந்தது.
அந்த வசந்த காலம் மீண்டும் வருமா?
அந்த வசந்த காலத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது என்பது கடினம். ஆனால் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
ஆம்.
அந்த முயற்சியை நாம் முன்னெடுத்துள்ளோம். உருவாகியுள்ளது 'வலை ஓலை' வலைத்திரட்டி.
இந்த வலைத் திரட்டியில் இதுவரை 41 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 100 வலைத்தளங்கள் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் விரைவில் இணைப்போம். குறைந்தது 250 வலைப்பதிவுகளை இணைக்க எதிர்பார்த்துள்ளோம். அதிகபட்சமாக 1000 வலைத்தளங்களையாவது இணைக்க வேண்டும் என்பது எமது அவா.
ஆனால் ஒரு சிறு குறை. எமது 'வலை ஓலை' வலைத் திரட்டியின் பயன்பாடு வலைப்பதிவர்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது. எந்த அளவுக்கு அதிகமாக திரட்டியை பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான ஈடுபாட்டுடன் 'வலை ஓலை' வலைத் திரட்டியின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
ஆகவே வலைத் திரட்டியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைத் திரட்டியின் நிறை, குறைகளை பதிவுகளாக வெளியிட்டு விவாதியுங்கள். அப்போது தான் தவறுகளைத் திருத்தி முன்னேற முடியும். எழுத்து தானே நமது ஆயுதம்?
நாம் இன்னுமின்னும் நூற்றுக்கணக்கான புதிய தலைமுறை வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு நமது ஒற்றுமை அவசியம். அதற்காகவே புதிய வலைத்திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
வாருங்கள் - புதுயுகம் படைப்போம்....!
(பேசுவோம்...)
வலை ஓலை - எழுத்தாணி - சொல்
https://newsigaram.blogspot.com/2020/04/valaioalai-ezhuthani-sol-01.html
வலை ஓலை செழிக்கும் தழைக்கும்
ReplyDeleteநன்றி தங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா.
Deleteஇந்த தீநுண்மி காலம் முடியட்டும்... சிறப்பாக செய்து விடுவோம்...
ReplyDeleteநிச்சயமாக. தங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் ஒத்துழைப்பு நிச்சயமாகத் தேவை.
Deleteநல்ல முயற்சியில் களம் இறங்கியுள்ளீர்கள். வலை ஓலையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.(எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
ReplyDeleteநன்றி. தங்கள் வாக்கு பலிக்கட்டும். தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் வலைத்தளங்களுடன் நேரத்தை செலவழிப்பது மகிழ்ச்சி.
Deleteவலை ஓலை - சிறப்பாக தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும் சிகரம் பாரதி.
ReplyDeleteமிக்க நன்றி தோழரே.
Delete