சிகரம் பாரதி - 0003

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். மீண்டும் ஒரு வாட்ஸப் பதிவுடன் சந்திக்கிறேன். வாட்ஸப் கேலி கிண்டல்களை மட்டுமல்லாது சிந்தனைக்குரிய விடயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேறு எந்த செயலியை விடவும் வாட்ஸப் பிரபலமாக இருக்கிறது. காரணம் குறைந்த வசதிகளையுடைய கைப்பேசியில் கூட வாட்ஸப்பை பாவிக்கக் கூடியதாக உள்ளது தான். இதன் எதிர்காலத்தை மிகச் சரியாகக் கவனித்து பேஸ்புக் உரிய காலத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டது. வாழ்க வாட்ஸப்! வாழ்க பேஸ்புக்!

# இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் (பாதை) மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லணும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, even they protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்... #

அத்துடன் இன்று சன் தொலைக்காட்சியில் மாலை 6.30க்கு காஞ்சனா திரைப்படம். திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியிலும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். விறுவிறுப்பான திரைப்படம். விஜய் தொலைக்காட்சியில் மாலை 03.00 மணிக்கு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 'டிஜிட்டல் நிறைந்த உலகத்தில் வாழ்கிறேன் என்று சொல்பவர்களும் டிஜிட்டல் நிறைந்த உலகத்தை எதிர்க்கிறேன்' என்று சொல்பவர்களும் பேசினார்கள். அற்புதமாக இருந்தது. இது பற்றி நாமும் விரிவாகப் பேசவேண்டும் என எண்ணுகிறேன். பிறிதொரு நாளில் பேசுவோம். 

மீண்டும் சந்திப்போம். நன்றி.

Comments

  1. நல்ல கருத்து க்கு மிக நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!