சிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்!
001. இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விபரங்களை பயணியின் கவனத்திற்கு காட்சிப்படுத்துதல் மற்றும் பயணச்சீட்டு வழங்குதல் ஆகியன இவற்றுள் முக்கியமானவை.
002. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியின் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை என்பதையே சூழ்நிலைகள் உணர்த்தி நிற்கின்றன. இதனை விட சர்வாதிகார ஆட்சியில் நன்றாக இருந்தோம் என மக்களே வாய்விட்டுக் கூறி வருகின்றனர். நல்லாட்சி மக்களாட்சியாகுமா?
003. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர் வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் மற்றும் அ.தி.மு.க வின் எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழா என்பவையே அந்த நிகழ்ச்சிகளாகும்.
005. நோக்கியா கைப்பேசிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 'நோக்கியா 6' என்னும் கைப்பேசி இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக அளவிலான பாவனையாளர்களுக்கான நோக்கியா கைப்பேசிகள் சந்தைக்கு வரும் என நம்பலாம்.
003. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர் வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் மற்றும் அ.தி.மு.க வின் எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழா என்பவையே அந்த நிகழ்ச்சிகளாகும்.
005. நோக்கியா கைப்பேசிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 'நோக்கியா 6' என்னும் கைப்பேசி இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக அளவிலான பாவனையாளர்களுக்கான நோக்கியா கைப்பேசிகள் சந்தைக்கு வரும் என நம்பலாம்.
குறிப்புகளுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteதகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteபுதுத்தகவல்கள் தெரிந்து கொண்டேன், நன்றி.
ReplyDeleteநன்றி தோழி.
Deleteதொடரட்டும் குறிப்புகள்......
ReplyDeleteமிக்க நன்றி தோழரே!
Delete