சிகரம் 200!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல்!
'சிகரம்' வலைத்தளத்தின் 200வது பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வலைத்தளத்தை ஆரம்பித்து ஐந்தாவது வருடத்தில் 200 என்னும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. ஆயினும் எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை. கையெழுத்து சஞ்சிகையாகத் துவங்கிய 'சிகரம்' இனை இணையத்தளமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளேன். தொடர்ந்து 'சிகரம்' நிறுவனத்தைத் தொடங்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். 'சிகரம்' கையெழுத்துப் பத்திரிகையாக இருந்தபோதே குறிக்கோள் , தூரநோக்கு என அனைத்தையும் வரையறை செய்துவிட்டேன். இனி 'நிறுவனம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது மட்டுமே இலக்காக இருக்கப் போகிறது. இதுவரை என்னுடன் துணைவந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் அனைவரும் இனிவரும் காலங்களிலும் உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எழுத்துப் பணியிலீடுபட்டு வருகிறேன். 'சிகரம்' துவங்கி 10 ஆண்டுகளாகப் போகின்றன. இதுவரை தனி மனித முயற்சியாகவே நடாத்தி வந்துவிட்டேன். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தனிமனித முயற்சியிலேயே காலத்தைக் கடத்துவது? சமூகத்தை ஒன்றிணைத்து வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. 2017 ஜனவரியில் இணையத்தளம் பரிசோதனை அடிப்படையில் மக்கள் பார்வைக்கு வழங்கப்படும். உத்தியோகபூர்வமாக 01.06.2017 இல் 'சிகரம்' இணையத்தளம் துவங்கும். 2018 / 2019 காலப்பகுதியில் 'சிகரம்' நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டு 2020க்குள் நிறுவன ரீதியான செயல்பாடுகள் துவங்கும். இதுவே இப்போதைய என் திட்டம். முடிவு காலத்தின் கையில்.
நாளை நமதே!
நாளை நமதே!
200 வது பதிவிற்கும்
ReplyDeleteஇது ஆயிரமாயைரமாய்த் தொடர்வதற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
200வது பதிவு எழுதுவது என்பது பாரட்டப் பட வேண்டியது
ReplyDeletehttp://www.viyanpradheep.com/
வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDelete