பீப்... பீப்.... (Peep... Peep...)
பீப்... பீப்.... (Peep... Peep...)
காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தைச் சென்றடைந்து விடுகிறீர்கள். ஆனாலும் அந்த அவசரம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களை விட்டுப் போவதில்லை. இன்னும் விரைவாக, இன்னும் விரைவாக என்றுதான் பறக்கிறார்கள். பீப் ஒலியை இடைவிடாமல் எழுப்பி சுற்றியுள்ளவர்களை எரிச்சலூட்டுகிறார்கள். இது ஏன்?
சாதாரண மக்களை விட வாகன உரிமையாளர்கள் தங்கள் இடங்களுக்கு விரைவாகப் பயணிக்க முடியும். ஆனாலும் தங்கள் அவசரப் புத்தியினால் தமது சூழலை ஒலி மாசடைதலுக்கு உள்ளாக்குகிறார்கள். குறிப்பாக உந்துரூளி மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் அவசரம் ஒலி மாசடைதலை மட்டுமல்லாது பாதசாரிகளுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் காணப்படுகின்றது.
இவர்கள் பாதை ஒழுங்கை மதித்து வாகனத்தை ஓட்டுவதில்லை. பாதையில் மற்ற வாகனங்களை முந்துவதற்காக குறுக்கும் நெடுக்குமாக வாகனத்தை செலுத்துவார்கள். பாதசாரிகள் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் வாகனத்தை செலுத்துவார்கள். சமிக்ஞை விளக்குப் பகுதியில் ஏராளமான வாகனங்கள் காத்துக் கிடக்க உந்துரூளிகளும் முச்சக்கர வண்டிகளும் அவற்றையெல்லாம் முந்திக் கொண்டு சென்று நிற்கும். இது நியாயமல்லவே? மேலும் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தங்கள் வாகனத்தை உள் நுழைப்பார்கள். இதனால் போக்குவரத்தில் ஒரு ஒழுங்கின்மையும் ஏனைய வாகனங்களுக்கு இடையூறும் ஏற்படும். ஆனால் இது எதுவுமே வாகன உரிமையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதில்லை. தான் போய்ச் சேர்ந்தால் சரி என்கிற தன்னலம். இந்தத் தன்னலம் தான் பல விபத்துக்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.
வாகனப் போக்குவரத்து தொடர்பில் பல்வேறு சட்டங்கள் அமுலில் இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. மேலும் வாகன நெரிசல் மிக்க வீதியொன்றில் ஆம்புலன்ஸ் வண்டியொன்று வந்தால் எந்தவொரு வாகனமும் அதற்கு வழிவிடுவதில்லை. யாரும் அதைக் கண்டுகொள்வது கூட இல்லை. போக்குவரத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழியை ஏற்படுத்தித் தருவதில்லை. எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கிறார்கள்.
ஆகவே ஆம்புலன்ஸ் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விசேட சட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். உந்துரூளி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பயணிப்பதற்கான ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்கள் பீப் ஒலியெழுப்புவது தொடர்பிலும் நியமமொன்று உருவாக்கப்படுதல் அவசியமாகும்.
காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தைச் சென்றடைந்து விடுகிறீர்கள். ஆனாலும் அந்த அவசரம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களை விட்டுப் போவதில்லை. இன்னும் விரைவாக, இன்னும் விரைவாக என்றுதான் பறக்கிறார்கள். பீப் ஒலியை இடைவிடாமல் எழுப்பி சுற்றியுள்ளவர்களை எரிச்சலூட்டுகிறார்கள். இது ஏன்?
சாதாரண மக்களை விட வாகன உரிமையாளர்கள் தங்கள் இடங்களுக்கு விரைவாகப் பயணிக்க முடியும். ஆனாலும் தங்கள் அவசரப் புத்தியினால் தமது சூழலை ஒலி மாசடைதலுக்கு உள்ளாக்குகிறார்கள். குறிப்பாக உந்துரூளி மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் அவசரம் ஒலி மாசடைதலை மட்டுமல்லாது பாதசாரிகளுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் காணப்படுகின்றது.
இவர்கள் பாதை ஒழுங்கை மதித்து வாகனத்தை ஓட்டுவதில்லை. பாதையில் மற்ற வாகனங்களை முந்துவதற்காக குறுக்கும் நெடுக்குமாக வாகனத்தை செலுத்துவார்கள். பாதசாரிகள் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் வாகனத்தை செலுத்துவார்கள். சமிக்ஞை விளக்குப் பகுதியில் ஏராளமான வாகனங்கள் காத்துக் கிடக்க உந்துரூளிகளும் முச்சக்கர வண்டிகளும் அவற்றையெல்லாம் முந்திக் கொண்டு சென்று நிற்கும். இது நியாயமல்லவே? மேலும் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தங்கள் வாகனத்தை உள் நுழைப்பார்கள். இதனால் போக்குவரத்தில் ஒரு ஒழுங்கின்மையும் ஏனைய வாகனங்களுக்கு இடையூறும் ஏற்படும். ஆனால் இது எதுவுமே வாகன உரிமையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதில்லை. தான் போய்ச் சேர்ந்தால் சரி என்கிற தன்னலம். இந்தத் தன்னலம் தான் பல விபத்துக்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.
வாகனப் போக்குவரத்து தொடர்பில் பல்வேறு சட்டங்கள் அமுலில் இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. மேலும் வாகன நெரிசல் மிக்க வீதியொன்றில் ஆம்புலன்ஸ் வண்டியொன்று வந்தால் எந்தவொரு வாகனமும் அதற்கு வழிவிடுவதில்லை. யாரும் அதைக் கண்டுகொள்வது கூட இல்லை. போக்குவரத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழியை ஏற்படுத்தித் தருவதில்லை. எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கிறார்கள்.
ஆகவே ஆம்புலன்ஸ் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விசேட சட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். உந்துரூளி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பயணிப்பதற்கான ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்கள் பீப் ஒலியெழுப்புவது தொடர்பிலும் நியமமொன்று உருவாக்கப்படுதல் அவசியமாகும்.
அருமை
ReplyDeleteசிறந்த பதிவு