Posts

டாஷ்போர்டு புட்டுக்கிச்சி !

Image
எல்லாத்துக்கும் வணக்கமுங்க! போன மாசம் வரைக்கும் என்னோட வலைப்பதிவு நல்லாத்தான் இருந்திச்சி. என்னோட வளர்ச்சி புடிக்காம [????] யாராச்சும் சூனியம் வச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். நம்ம பிளாக்கர் டாஷ்போர்டு புட்டுக்கிச்சுங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டேன். ம்ஹும்... ஒன்னும் வேலைக்கே ஆகல. ஆகக் கடைசியா ஒன்னு பண்ணேன். நம்ம காளி கோயில் பூசாரியைக் கூப்பிட்டு பிளாக்குக்கு விபூதி மந்திரிச்சு வச்சும் பார்த்தேன். அதுக்கும் சரி வராததால மறுபடியும் அவர அழைச்சுக்கிட்டு வந்தேன். அவுரு "தம்பீபீபீ......................." அப்படின்னு சாமிய வரவழைச்சுக்கிட்டு என்னக் கூப்பிட்டார். பயத்துல பதறிப் போன நான் என்னோட பிளாக்கு சைடு பார்ல போய் பசக்குன்னு ஒட்டிக்கிட்டேன். இழுத்துப் புடிச்சு மறுபடியும் கீழ உக்கார வச்சார். "இது சர்வதேச சக்திகளோட சதின்னு என் காளி சொல்றா.... என்னால எதுவும் பண்ண முடியாது. வேணும்னா ஒரு தாயத்து மந்திரிச்சுத் தாறேன்"னார். "சரி"ன்னு ஒரு தாயத்த வாங்கி கீபோர்ட சுத்தி கட்டி வச்சேன்.  கடைசில டைப் பண்ணத்தான் கஷ்டமாகுனிச்சே தவிர பிரச்சன தீ...

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 4 பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 பகுதி - 06 திவ்யாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் நான் "ஹலோ" என்றேன். ஆனால் மறு முனையில் பதில் இல்லை. ஓரிரு வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப் பட்டது. இணைப்புக் கோளாறா அல்லது நான் பேசவில்லை என்று இணைப்பைத் துண்டித்து விட்டாளா என்பதை அறிந்து கொள்வதற்காக நான் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண் குரல் சொல்லிப் போனது. 'ஒரு வேளை இது திவ்யா - நந்தினி யின் விளையாட்டாக இருக்குமோ?' என்று கூட என் மனம் யோசித்தது. நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது?  'இது திவ்யாவின் விளையாட்டாக இருந்தால் இந்த பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றே இருக்காதே? ஆமாம். ஆனா...

2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

Image
உலக அழிவுக்கு இன்னும் நாலரை மாதங்களே உள்ளன. இந்நிலையில்  அது தொடர்பான சூடான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. நாமும் அதைப் பற்றி சற்றுப் பேசலாமே என்று எண்ணினேன். ஏற்கனவே "சிகரம்" தளத்தில் வெளியான தொகுப்பு இது. 2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01 அது தொடர்பாக வாசகர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் வாக்களிப்புப் பட்டை ஒன்று நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. (அது எங்கே இருக்குன்னு நா சொல்ல மாட்டேன். சரியா கண்டு பிடிச்சு வாக்களிப்பவர்களுக்கு ஒரு ரகசியப் பரிசு காத்திருக்கிறது.) அதிலே வாக்களித்து உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுமாறு அன்போடு அனைவரையும் அழைக்கிறேன். Image Credit : Google பதிவு இன்னும் நீட்டமா இருக்கும்னு நினைச்சவங்களுக்கு பதிவு இதோட முடிஞ்சிருச்சினு இத்தால அறிவிச்சிக்கிறேன். ஆனா இன்னும் ஒன்னையும் சொல்லிக்க ஆசைப்படுறேன். நம்ம பழைய பதிவுகளையும் வாசிச்சு ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா.                   ***********************...

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 4 பகுதி - 05 நந்தினியின் மணமகள் தோழியாக வந்தது திவ்யாதான் என்பதைச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து மௌனமானான் சுசி. நான் தொடர்ந்து பேசலானேன். "அது மட்டுமில்ல. நாங்க வெளில வர்றப்ப கதவுல சாஞ்சி நின்னுக்கிட்டு அவ பார்த்த பார்வ என்னை இன்னமும் என்னமோ பண்ணுதுடா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் சுசி." "அது எப்படிடா முடியும்?" சுசி தன் மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான். "அவ என்னை நாளைக்கு எங்க வழமையான இடத்துல சந்திக்க வரச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கா.... "திவ்யாவா இது?" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான். "ம்...... அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல." "அன்னிக்கு பிரிஞ்சிருவோம்னு முடிவெடுத்ததும் அவதான். இன்னிக்கு பேசணும்னு சொல்லிருக்கதும்...

இன்னும் சொல்வேன் - 01

Image
மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது.  அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்ல...

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.  திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்த...

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

Image
கல்யாண வைபோகம் - தொடர் கதை - முழுத்தொகுப்பு அத்தியாயம் - 03   "வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை. வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன. வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரி...

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

Image
கல்யாண வைபோகம் - தொடர் கதை - முழுத்தொகுப்பு அத்தியாயம் - 02  அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.  முழுமையாகப் படிக்க   Post Date 12/07/2012 | Edit date 19/09/2018  கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

Image
"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?" "நீ இல்லாம எப்படி ஜெய்?" "எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....." "நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" முழுமையாகப் படிக்க     Post Date 05/07/2012 | Edit date 15/09/2018  கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

முக நூல் முத்துக்கள் பத்து

Image
எனது முக நூலில் (பேஸ்புக்) என்னைக் கவர்ந்த சில பகிர்வுகளை இங்கே நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை இதோ: 01. #என்னிடம் 271 நண்பர்களுடன் (254 பெண்கள் நண்பிகள்) ஒரு பொய்யான fb account விட்பனைக்கி உண்டு தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும் .....# 02. #முகத்தை காணும் முன்பே நேசிக்கத்  தெரிந்தவள் " தாய்" மட்டுமே # 03. # தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல தாய்வழி சொந்தம் போல பாசமில நேசமில்ல சொந்தம் நூறு சொந்தம் இருக்குது பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா சாமி நூறு சாமி இருக்குது தாய் ரெண்டு தாய் இருக்குதா  Image Credit: Google / Facebook 04. #காதல்- காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி. தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது...# 05. #ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!! -அப்துல் கலாம்-# 06. #நீங்கள் வாழக் கற்றுக்கொடுத்ததில்லை..  வாழ்ந்து காட்டினீர்கள்..  அப்பா உங்களை பார்த்தே வளர்ந்...

வாங்கையா வாங்க!

Image
அண்மையில் எனது Google plus தளத்தில் எனக்கு ரசிக்கக் கிடைத்த 5 புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். அனைத்து புகைப்படங்களுமே இயற்கை சார்ந்தவை. ஏதோ ஒரு வகையில் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என நம்புகிறேன்.  மேலும் இப் பதிவின் மூலம் வாசகர்களுடன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அழகிய புகைப் படங்களை ரசித்த படியே இவற்றையும் இடைக்கிடை வாசித்துக் கொள்ளுங்கள். நான் இந்த 'சிகரம்' வலைப் பதிவை பல கனவுகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஆயினும் மனதில் ஒரு சின்ன குறை. நான் வலைப் பதிவை ஆரம்பித்து முதலாவது பதிவை வெளியிட்ட ஓரிரு நிமிடங்களில் வாசகர் ஒருவர் தனது கருத்தினை (Comment) 'சிகரம்' வலைத்தளத்தில் பதிவு செய்தார்.  அது எனக்கு மனதில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து வந்த பதிவுகளுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கருத்துரைகள் பதிவு செய்யப் படுவது அரிதாகவே நடை பெற்றது.  எனது பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாகுகளை வழங்குவதுடன் உங்களை கவர்ந்த பகுதியையும் மறக்காமல் கோடிட்டுக் காட்டிவிட்...

குடிச்சுப் பாருங்க!

Image
ஒரு தொண்டு நிறுவனம் தொடர் மதுவிலக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்தது. மதுப் பிரியர்கள் அதிகம் உள்ள பகுதி அது. கூட்டம் ஆரம்பித்தது. "அன்பானவர்களே... இந்தக் குடிப் பழக்கம் இருக்கிறதே... அதை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை... குடி குடியைக் கெடுக்கும்..." அவ்வளவு தான். கூட்டத்தில் சலசலப்பு. "யோவ் உக்கார்றியா? மண்டைல போடவா?" என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் பேசியவர் தொங்கிய முகத்துடன் இருக்கையில் அமர்ந்தார். அடுத்தவர் வந்தார். மைக்குக்கு முன்னால் இருந்த சோடா பாட்டிலைப் ( Bottle) பார்த்தார். "இதை யாரு இங்க வச்சது? யாராவது ஒரு குவாட்டர் பாட்டில்  ( Bottle) இருந்தா எடுத்து வந்து வைங்களேன்..." கூட்டம் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தது. "சின்ன வயசுல எங்கப்பா படி, படின்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. நான் கேக்கலையே, பத்தாவது பெயிலு... அதுனால என்ன குறைஞ்சா போயிட்டேன்?" "அப்படிப் போடு!" கூட்டத்தில் ஒரு குரல். "என்ன... வேலை கிடைக்கல. போயிட்டுப் போகுது. சொத்தையெல்லாம் வித்துக் குடிச்ச...

சாத்தானின் தூதன் - டாக்டர் 7!

Image
                          உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் காமிக்ஸ் கதைகள் மீது தீராத காதல் இருக்கிறது? காமிக்ஸ் புத்தகங்களை எங்கே வாங்குவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் வாசித்துத் தான் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.                     தமிழ் காமிக்ஸ் கதைகளைப் பொறுத்த வரை எனக்கு நன்கு பரிச்சயமானது 'முகமூடி வீரர் மாயாவி'யின் கதைகள் தான். அது எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்று என் கரம் கிட்டியது. முதன் முதலில் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை நான் படித்தது 'முகமூடி வீரர் மாயாவி'யினுடையது அல்ல.                'ஏஜென்ட் காரிகன்' இன் சாகசக் கதை. பிரபல வலைப் பதிவர்களுள் ஒருவரான லோஷன் அண்ணா அண்மையில் தான் படித்த 'தலை வாங்கிக் குரங்கு' பற...