Posts

Showing posts from October, 2024

ஆசான் பாராவுக்கு சிகரம் பாரதி எழுதும் ஒரு கடிதம்

Image
ஆசான் என்று பலராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாரா எனப்படும் எழுத்தாளர் பா ராகவனுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் உங்கள் 75 ஆவது புத்தகம் வெளியாகும் இந்த தருணத்தில் கடிதம் எழுதுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. உலக அரசியலைத் தமிழில் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் பா ராகவனின் புத்தகங்களை தேடாமல் இருந்ததில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் வட கொரியா பிரைவேட் லிமிடெட் என்ற சர்வதேச அரசியலைப் பேசும் புத்தகமே உங்கள் 75 ஆவது புத்தகமாக வருவதில் மகிழ்ச்சி.  நீங்கள் என் கடிதத்திற்கு பதில் எழுதுவீர்களா என்று தெரியாது. ஆனால் சர்வ நிச்சயமாக அந்த எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆண்டில் உங்கள் 09 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். இப்போது கணை ஏவு காலம், எழுதுதல் பற்றிய குறிப்புகள், மணிப்பூர் கலவரம் ஆகியவை இந்த ஆண்டில் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் உள்ளன.  நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் கடந்த ஆண்டு வாங்கினேன். ஆனால் கடந்த மாதம் தான் வாசித்தேன். இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தம் ஆரம்பித்த போது வாங்கியதை யுத்தத்தின் ஓராண

சௌம்யாவின் BOYZ சிறுகதையை முன்வைத்து...

Image
சௌம்யா ராகவன் டுவிட்டரில் அறிமுகமானவர். பின்னர் பேஸ்புக்கிலும். அவரது களிற்றடி சிறுகதைத் தொகுப்பை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. ஆனால் சௌம்யாவின் வலைத்தளத்தில் வெளியாகும் கதைகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.  BOYZ சிறுகதை என்ன சொல்கிறது? உறவு முறைச் சிக்கல் ஒன்றின் ஒரு பக்கத்தை இந்தக் கதை பேசியிருக்கிறது.  முக்கிய குறிப்பு: சிறுகதையை வாசிக்காதவர்கள் அதனை வாசித்துவிட்டு வருவது சிறப்பு.  இணைப்பு: https://www.arattaigirl.com/2024/08/boyz.html   ***  தமிழ்ச்செல்வி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சுபாஷூடன் திருமணமாகிறது. சுபாஷூக்கு அப்போதே 37 வயது. தமிழின் அம்மா பத்மா. ஒரு சமயம் வீட்டு வாசலில் இட்லிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தாள். அப்போது கடைக்கு வாடிக்கையாக வந்து சென்றவர்களில் தான் இந்த சுபாஷ் அறிமுகம் ஆகிறார். மனநிலை சரியில்லாத கணவன் காரணமாக அவ்வப்போது வீட்டுக்கு உதவிகள் செய்து வரும் சுபாஷை தன் வீட்டில் வாடகைக்கு குடிவைக்கிறாள் பத்மா.  ஒரு கட்டத்தில் கணவன் இறந்துவிட ஒருவருக்கு மற

பேஸ்புக் Vs முகநூல்

Image
பேஸ்புக் Vs முகநூல்  பேஸ்புக்கை அதே பெயரில் குறிப்பிடுவதா அல்லது முகநூல் என்று தமிழில் அழைப்பதா என்று ஒரு குழப்பம் நெடுநாளாக இருக்கிறது. தமிழில் எழுத வேண்டும், தூய தமிழை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது தான் முகநூல் என்ற பெயர் சூட்டல். அதேபோல் டுவிட்டருக்கு கீச்சகம் என்றும் இந்த தமிழ் ஆர்வலர்கள் சொன்னார்கள். வாட்ஸப்புக்கு புவனம் என்றார்கள். இன்னுமின்னும் இதே போல பல பெயர்சூட்டல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இது சரியா தவறா என்றால் தவறு என்பதே நேரடி பதிலாகும்.  முதலில் பேஸ்புக், டுவிட்டர் என்பதெல்லாம் வணிகப் பெயர்ச் சொற்கள் என்பதை கருத்திற் கொள்ளுங்கள். பெயர்ச்சொல் என்பது எந்தவொரு மொழிக்காகவும் மாற்றம் செய்யப்பட முடியாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுரேஷ் என்ற பெயரை ஆங்கிலத்தில் அழைத்தாலும் சுரேஷாகவே இருக்க வேண்டும், கொரிய மொழியில் அழைத்தாலும் சுரேஷாகவே இருக்க வேண்டும். இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். சுரேஷ் என்றால் ஆங்கிலத்தில் ஜோன் என்று அர்த்தம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு ஆங்கிலேயர் ஜோன் என்று அழைத்தால் சுரேஷ் திரும்புவாரா? இல்லை தானே? அவ்வாறே