ஆசான் பாராவுக்கு சிகரம் பாரதி எழுதும் ஒரு கடிதம்
ஆசான் என்று பலராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாரா எனப்படும் எழுத்தாளர் பா ராகவனுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் உங்கள் 75 ஆவது புத்தகம் வெளியாகும் இந்த தருணத்தில் கடிதம் எழுதுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. உலக அரசியலைத் தமிழில் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் பா ராகவனின் புத்தகங்களை தேடாமல் இருந்ததில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் வட கொரியா பிரைவேட் லிமிடெட் என்ற சர்வதேச அரசியலைப் பேசும் புத்தகமே உங்கள் 75 ஆவது புத்தகமாக வருவதில் மகிழ்ச்சி. நீங்கள் என் கடிதத்திற்கு பதில் எழுதுவீர்களா என்று தெரியாது. ஆனால் சர்வ நிச்சயமாக அந்த எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆண்டில் உங்கள் 09 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். இப்போது கணை ஏவு காலம், எழுதுதல் பற்றிய குறிப்புகள், மணிப்பூர் கலவரம் ஆகியவை இந்த ஆண்டில் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் உள்ளன. நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் கடந்த ஆண்டு வாங்கினேன். ஆனால் கடந்த மாதம் தான் வாசித்தேன். இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தம் ஆரம்பித்த போது வாங்கியதை யுத்தத்தின் ஓராண