Posts

Showing posts from 2025

செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும்?

Image
செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும் என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக பலருக்கு செயற்கை நுண்ணறிவு என்ன செய்யும் என்பதே தெரிந்திருக்கவில்லை. ஆகவே நமது கட்டுரைக்குத் தேவையான அளவு அந்தப் பக்கம் கொஞ்சம் போய் வரலாம். தொழிநுட்ப ரீதியாக விளக்காமல் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதை வைத்து விளக்குகிறேன். அது உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள உதவி புரியலாம்.  நமது பள்ளிக் கல்வி பாலர் பாடசாலையில் ஆரம்பித்து, பாடசாலை, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று சென்று சிலநேரங்களில் உயர் படிப்பு வரை போகிறது. நாம் ஒவ்வொரு படிப்பும் தரும் அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்துசென்று விடுகிறோம். திடீரென்று முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் நமக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எப்போதோ கற்ற ஒன்றை நாம் அப்படியே நினைவில் வைத்திருப்பதில்லை. உணவு எப்படி வயிற்றுக்குள் சென்று சத்துக்களை மட்டும் உடலுக்கு அளித்துவிட்டு மிகுதி கழிவாக வெளியேறி விடுகிறதோ கல்வியும் அப்படித்தான்.  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ந...

உரைநடை எழுத்தாளர் ஆவது எப்படி - பாராவின் உரையை முன்வைத்து...

Image
காலை ஏழு மணிக்கு எனது இன்றைய நாளை ஆரம்பித்தேன். நேற்று முன்தினம் இரவு மூன்று மணித்தியாலமே உறங்கக் கிடைத்தது. நேற்று அதிகாலை 03.30 க்கு வேலைக்காக எழுந்து சென்று மீண்டும் வீடு திரும்பியபோது மாலை நான்கு மணி. ஒரு மணிநேரம் மட்டும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க நேரம் கிடைத்தது. மீண்டும் ஆசான் பாராவின் மிருது வாட்ஸ்அப் நாவல் தொடரை வாசித்துவிட்டு உறங்கும் போது நள்ளிரவு 12.30. அதிகாலை நான்கு மணியளவில் பாரிய சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கூர்ந்து அவதானித்ததில் இடியும் மின்னலும் தன் லீலைகளை காட்டிக் கொண்டிருந்தன. மீண்டும் கஷ்டப்பட்டு உறங்கி ஏழு மணியளவில் விழித்துக் கொண்டு தேநீரை அருந்தினேன். சரி, இப்போதே வாசிக்க வேண்டாம், எதையாவது கேட்கலாம் என்று யூடியூபை Scroll செய்த போது 'காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஆசான் பாரா ஆற்றிய உரையொன்று கண்ணில் பட்டது. ஏற்கனவே கேட்ட ஞாபகம். சரி மீண்டும் கேட்கலாம் என்று காணொளியை Play செய்து கேட்க ஆரம்பித்தேன்.  நேற்று பாரதி சித்தர்களை சந்தித்ததை பற்றி ஆசான் பாரா எழுதியிருந்தார். இன்று இந்த உரையில் யேசுவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த கதையில், ...