சென்னைக்கு விசில் போடு!

                  ஐ.பி.எல். என்கிற இந்தியன் பிரிமியர் லீக் 20-இருபது கிரிக்கட் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். இன்னும் இரண்டே போட்டிகள். 7 வது தொடரின் மகுடம் யாருக்கென்று தெரிந்துவிடும்.

 

         என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில் இருந்தே சென்னைக்கு தான் ஆதரவு. முதல் காரணம் தோனி . அடுத்தது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதாலும் இன்னபிற காரணங்களாலும். இதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ஆட்டத்திற்கும் சென்னை தேர்வாகியிருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் சென்னை எதிர் பஞ்சாப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடவிருக்கிறது.

  
                              இந்த முறையும் ஐ.பி.எல் கிரீடத்தை சென்னை வெல்ல வேண்டும் என்பதே என் அவா. உங்களுக்கு?

                    இதுவரை ஒரு மகுடத்தையேனும் வென்றிராத கிங்ஸ் இலவன் பஞ்சாப் [Kings XI Punjab ] அணி தனது புதிய வரலாற்றை படைக்க தயாராகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் [Chennai Super Kings ] அணி தனது இரண்டு மகுடங்களுக்கு அருகில் இன்னுமொரு மகுடத்தையும் சேர்த்துக் கொள்ளத் துடிக்கிறது. வெல்லப் போவது யார்? வாருங்கள் பார்க்கலாம்!

Comments

  1. இன்று பாதிக் கிணறை தாண்ட வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே... சென்னையை பஞ்சாப் வெல்லுமா உலகிலே?

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்