தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!
அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை.
காரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்! இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் கோடிகளைக் கொட்டி திரைப்படங்களை எடுக்கிறார்கள். அந்தத் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்றால் ஒருவன் தனது மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை வாரி இறைக்க வேண்டியுள்ளது. திரையரங்க உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண விலையை விட இருமடங்கிற்கும் மேல். தமது பல நாள் உழைப்பை ஒரு நாளில் வீணடித்துத்தான் இந்த ஞானவேல்ராஜாக்களின் தயாரிப்புக்களை மக்கள் ரசிக்க வேண்டியுள்ளது.
மக்கள் இறுவட்டுக்களிலும் இணையத்தளங்களிலும் திரைப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் திரையரங்குகளில்தான் ரசிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இன்ன பிறரும் திரையரங்கக் கட்டணங்கள் குறித்து கவனம் செலுத்த மறுப்பதேன்? தயாரிப்பாளர்களுக்கு லாபம் லகரங்களில் வந்தால் சரி. மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று போய்விடுவீர்கள். வணிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்களுக்கு தேவையில்லாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துவீர்கள். திரைத்துறையில் அலுப்புத் தட்டினால் அரசியலுக்கு வந்து எங்களையே ஆள்வீர்கள். ஆனால் திரையரங்குகள் குறித்து உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. போங்கடா நீங்களும் உங்க நியாயமும்...
மக்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்களையே குறை சொல்கிறார்களாம். ஒரு பொது நிகழ்ச்சிக்கு வழக்கறிஞரோ மருத்துவரோ வராவிட்டால் கேட்பதில்லையாம். நடிகர்கள் வராவிட்டால் கேள்வி கேட்கிறார்களாம். கேட்கத்தானே செய்வோம்? உங்களைத்தானே தமிழர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்? ரஜினி என்றால் உயிரையும் கொடுப்பவன் உங்கள் ரசிகன் தானே? நீங்கள் உருவாக்கும் திரைப்படத்துக்கு தன் சொந்த செலவில் விளம்பரம் தேடிக்கொடுக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? தன் வீட்டுப் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் உங்களை பாலால் அபிஷேகம் செய்வானே? நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களை முதல்வராகவும் ஆக்குவானே? வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் யாரேனும் இப்படிச் செய்ததுண்டா? இவ்வளவும் செய்துவிட்டு தனக்கு பொதுவெளியில் ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் வராத போது உங்களை கேள்வி கேட்டுத்தானே ஆகவேண்டும்? ரசிகர்களால் கோடீஸ்வரன் ஆன நீங்கள் ரசிகர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் நியாயம், தர்மம் எல்லாம்.
இறுதியாக தயாரிப்பாளர்களும் நடிகர்களும் திரைப்படம் என்னும் கலையை ஏழை எளியவர்களும் கண்டு ரசிக்கக் கூடியதாக ஆக்க முயற்சி எடுக்காதவரை தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கும் இறுவட்டுக்களுக்கும் மக்கள் மத்தியில் என்றுமே பேராதரவு இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் மக்களால் முன்னேறும் நீங்களும் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய கடப்பாடுகளோடு நடந்துகொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம். வாழ்க தமிழ் ராக்கர்ஸ்!
50 : 50 தவறு...
ReplyDeleteபாதி சரி - பாதி பிழை. உண்மை தோழரே!
DeleteTicket 120rs sari poo nu vaangittu Ulla pona mukkaavaasi padam already paattha padam.meethi kaavasi puthusu thaanannu neenga kekkala paattum slow motion shots avum thaan irukku.sila mathangalukku munnaadi iethe than paathi padam slow motion
ReplyDeleteAda dhanda karumaantharangala 1 1/2 manineram padamnaalum uruppidiyaa yedunnga daa
Vaazhga Tamil rockers
உண்மை நண்பரே! தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். சொந்தமாக ஒரு திரைக்கதையை எழுதும் சக்தியற்ற துறையைத்தான் நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வேதனை!
Delete