அகவை பத்தில் சிகரம்!

                    வணக்கம் வாசகர்களே! உங்கள் அனைவரையும் வலைத்தளம் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தைத் துவங்கி ஜூன் முதலாம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. பதினோராம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் எண்ணங்கள் அனைத்தையும் செயலாக்கும் வல்லமை நமக்கு வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு முன்செல்வோம்.

                    மிக நீண்ட நாட்களுக்குப் பின் வலைத்தளம் மூலமாக சந்திக்கிறோம். வாசிப்புக்கும் எனக்கும் இடையில் நேர்ந்த இடைவெளி வலைத்தளத்துடனும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. குறைந்தபட்சம் தினசரிகளைக் கூட வாசிக்க அவகாசம் இல்லாது போய்விட்டது. வாசிப்பின் வாசனை இல்லாமல் எழுத்துக்களுக்கு எம்மால் கட்டளை இடமுடியாது. ஐந்து மாதங்களுக்குப் பின் இன்று தான் நூலகம் சென்றேன். புத்தகங்களைக் கண்டதும் மனதினுள் அளவில்லா ஆனந்தம்.

                   இனி குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு பதிவு அல்லது ஒரு மாதத்திற்கு மூன்றுக்கு குறையாத பதிவு இடவேண்டும். மாதத்தில் ஒரு முறையேனும் நூலகம் செல்ல வேண்டும். புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும். இம்மூன்றையும் தொடர்ந்து செய்வதே இப்போதைய இலக்கு.

நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்!

Comments

  1. வாழ்த்துகள்.

    பதிவுகளைத் தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நாட்கள் மாறினாலும் நட்பு மாறாமல் வாழ்த்தியமைக்கு நன்றி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்