சிகரம் பாரதி 41 / 50
சொர்க்கத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சந்தித்த வேளை அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்னும் சிறு கற்பனை. எல்லாம் வாட்ஸப் உபயம்!
எம்.ஜி.ஆர் : வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?
ஜெ : புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்
குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.
எம்.ஜி.ஆர் : மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?
ஜெ : உடல்நிலை சரியில்லை என்று!!!
எம்.ஜி.ஆர் : அமெரிக்கா சென்றாயா?
ஜெ : அப்பல்லோவுக்கு சென்றேன்!
எம்.ஜி.ஆர் : அதுபோதுமே சொர்க்கத்துக்குவர...
ஜெ : (சோகமாக) மக்களின் பாரமும்குறையவில்லை, என் மனபாரமும் குறையவில்லை, புறப்பட்டு வந்து விட்டேன்.
எம்.ஜி.ஆர் : நம்கட்சி?
ஜெ : கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா.
எம்.ஜி.ஆர் : நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்....
ஜெ : ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று , நான் இல்லாத வேதனையில் இன்று.
எம்.ஜி.ஆர்: நண்பர் கருணாநிதி?
ஜெ : ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.
எம்.ஜி.ஆர் : நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?
ஜெ : முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார். நான்விடவே இல்லை.
(அப்போது சோ வருவதைப்பார்த்து)
எம்.ஜி.ஆர் : அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒரு நாரதர் இருக்கிறாரே?
சோ : (சிரித்தபடி) நாரதர் கலகம் நன்மையில் முடியும். (ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு அங்கென்ன வேலை?
எம்.ஜி.ஆர் : அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!
சோ : நாடோடி மன்னா ...இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?
எம்.ஜி.ஆர் : (சோ முதுகில் தட்டிக்கொடுத்து) இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது . அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.
*****************************
நன்றி : வாட்ஸப்.
*****************************
நன்றி : வாட்ஸப்.
அருமையான பதிவு
ReplyDelete