சிகரம் பாரதி 25 / 50
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று காலை எட்டு மணிக்குத் துவங்கிய வேலை இரவு எட்டு மணிக்குத் தான் முடிவடைந்தது. இருப்புக் கணக்கெடுப்பு எதிர்பார்த்தது போலவே காலை துவங்கி மதியம் தான் நிறைவு பெற்றது. பணி முடிந்து இரவு வீடு திரும்புகையில் கடும் மழை. வெப்பம் கொளுத்தும் கொழும்பில் குளிரில் நடுங்கிய படியே வீடு வந்து சேர்ந்தேன். இடி மின்னலுடன் பெய்த கடும் மழை இரண்டு மணிநேரத்தில் அடங்கிப் போனது.
கொழும்பைப் பொறுத்தவரை மழை அவ்வளவாகப் பெய்யாது. சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குக் கூட மழை வராது. அப்படியே பெய்தாலும் சில நிமிடங்கள் அல்லது ஓரிரு மணித்தியாலங்களில் நின்று விடும். வெயில் நேரங்களில் வெப்பம் பாடாய்ப் படுத்தும். எனது மண் மலையகத்துக்கு சென்றால் குளிர் தாங்க முடியாது. கொழும்பில் இரவு 12 மணிக்குக் கூட எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடும் நான் ஊருக்குப் போனால் மாலை 6 மணிக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. காரணம் குளிர்.
இந்தச் சிறு தீவுக்குள்ளேயே எப்படி இத்தனை காலநிலை வேறுபாடுகள்? எல்லாம் இயற்கையின் திருவிளையாடல்கள் அல்லவா? இப்போது எனக்கு உறக்கம் வந்துவிட்டது. நாம் மீண்டும் சந்திக்கலாம்!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்