சிகரம் பாரதி 24 / 50
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! தீபாவளித் திருநாளான சனிக்கிழமையும் தொடர்ந்த ஞாயிறுமாக இரண்டு விடுமுறை நாட்களுக்குப் பின் ஒரு வேலை நாளை நிறைவு செய்து விட்டு வந்திருக்கிறேன். நாளை முதலாம் திகதி. எனது வேலைத் தளத்தில் மாதாந்த இருப்புக் கணக்கெடுப்பு நாள். காலை முதல் மதியம் வரை நீளும் கணக்கெடுப்புச் செயற்பாடு தலைவலியை வரவழைத்துவிடும். காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் வேறு தன் பங்கிற்கு தலைவலியை இன்னமும் அதிகப்படுத்தும். தினசரி வேலை, பின்பு வீடு என்று ஒரே சுழற்சியில் இயங்கிக் கொண்டிருப்பது மனதளவில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து வருடங்கள் கடந்து ஆறாவது வருடமாக ஒரே வேலையில் நிலைத்திருக்கிறேன். தற்போதைய வருமானத்திற்கு குடும்பச் செலவுகள் பழக்கப்பட்டுவிட்டதால் வேறு வேலையும் தேட முடியாத நிலை.
கல்வியும் இடை நடுவில். க.பொ.த உயர்தரம் ( தரம் 13 ) வரை கல்வி கற்றேன். உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவானேன். அனுமதிக்கான சகல செயற்பாடுகளையும் நிறைவு செய்துவிட்டு அழைப்புக்காகக் காத்திருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கான அழைப்பு வந்தது. பல்கலைக்கழக அழைப்பு வரும் வரைக்கும் மட்டும் இந்தத் தொழிலை மேற்கொள்வோம், அதன் பின்னர் விலகிவிடலாம் என்றெண்ணியே தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் பல்கலைக்கழக அழைப்பு வந்த போது மனம் மாறியிருந்தது. ஆம். கல்வியை விடுத்து தொழிலைத் தொடர்வதாய் தீர்மானித்தேன். பல்கலைக்கழகக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தொழிலில் இருந்து கொண்டே தனியார் கணக்கீட்டு நிறுவனங்களில் உயர்கல்வி கற்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது கைகூட வில்லை.
கல்வியும் இடை நடுவில். க.பொ.த உயர்தரம் ( தரம் 13 ) வரை கல்வி கற்றேன். உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவானேன். அனுமதிக்கான சகல செயற்பாடுகளையும் நிறைவு செய்துவிட்டு அழைப்புக்காகக் காத்திருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கான அழைப்பு வந்தது. பல்கலைக்கழக அழைப்பு வரும் வரைக்கும் மட்டும் இந்தத் தொழிலை மேற்கொள்வோம், அதன் பின்னர் விலகிவிடலாம் என்றெண்ணியே தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் பல்கலைக்கழக அழைப்பு வந்த போது மனம் மாறியிருந்தது. ஆம். கல்வியை விடுத்து தொழிலைத் தொடர்வதாய் தீர்மானித்தேன். பல்கலைக்கழகக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தொழிலில் இருந்து கொண்டே தனியார் கணக்கீட்டு நிறுவனங்களில் உயர்கல்வி கற்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது கைகூட வில்லை.
இணையத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமும் வழிதெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனக்கு கைப்பேசி, கணினி, இணையம் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் சார்ந்த அம்சங்களில் ஆர்வம் உண்டு. மேலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளிலும் அதிக ஆர்வம் உண்டு. நான் பிறந்த மலையக மண்ணிற்கு ஏதேனும் ஆக்கபூர்வமான உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. எனது ஆர்வம் சார்ந்த செயற்பாடுகளில் தொழில் தொடங்கி அதற்கு 'சிகரம்' என நாமம் சூட்டி கைநிறையப் பணம் சம்பாதித்து என் மலையகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அது நிறைவேறும் காலத்திற்காய் காத்திருக்கிறேன். காலம் கனியுமா?
தங்களின் விருப்பம் நிறைவேறும்
ReplyDelete