உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]
பகுதி - 01
பகுதி - 02
'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும்.
தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம்.
இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் சிலவும் தமது வாசகர் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்காக இணையத்தளம் ஊடாக வெளிவரும் பண்பினைக் காண்கிறோம்.
இணைய சிற்றிதழ்கள் முதலில் ஆங்கில கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியாகின. தற்போது தமிழ்க் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இணைய சிற்றிதழ்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் இணைய சிற்றிதழ்களின் தோற்றத்தில் இலங்கையின் யுத்த சூழல் ஏற்படுத்திய தாக்கம் ஒரு தூண்டுகோலாக அமைந்திருந்தது. இணையத் தளம் இன்றும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவே காணப்படுகின்றது.
ஆக, தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிற்றிதழ்களுக்கு உரிய பங்கானது பாரியது என்பதை யாராலும் மறுக்கவியலாது. நாள்தோறும் பல்வேறு சிற்றிதழ்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் சிறியதொரு தாக்கத்தையேனும் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்படுத்திச் செல்கின்றன. எனவே சிற்றிதழ் துறைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்துறையில் சீரான வளர்ச்சியை அடைய முடியும் என்பது திண்ணம்.
நன்றி.
சிகரம்பாரதி.
- பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை.
- ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை.
- பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல்.
தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம்.
இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் சிலவும் தமது வாசகர் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்காக இணையத்தளம் ஊடாக வெளிவரும் பண்பினைக் காண்கிறோம்.
இணைய சிற்றிதழ்கள் முதலில் ஆங்கில கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியாகின. தற்போது தமிழ்க் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இணைய சிற்றிதழ்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் இணைய சிற்றிதழ்களின் தோற்றத்தில் இலங்கையின் யுத்த சூழல் ஏற்படுத்திய தாக்கம் ஒரு தூண்டுகோலாக அமைந்திருந்தது. இணையத் தளம் இன்றும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவே காணப்படுகின்றது.
ஆக, தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிற்றிதழ்களுக்கு உரிய பங்கானது பாரியது என்பதை யாராலும் மறுக்கவியலாது. நாள்தோறும் பல்வேறு சிற்றிதழ்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் சிறியதொரு தாக்கத்தையேனும் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்படுத்திச் செல்கின்றன. எனவே சிற்றிதழ் துறைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்துறையில் சீரான வளர்ச்சியை அடைய முடியும் என்பது திண்ணம்.
நன்றி.
சிகரம்பாரதி.
வணக்கம்
ReplyDeleteஇன்று எல்லாம் சம நிலைக்கு வந்து விட்டது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை. மிக்க நன்றி நண்பரே.
Delete