கொஞ்சம் பேசுவோம்!

                 வணக்கம் வாசகர்களே! ஒரு கவலைக்குரிய விடயம் பற்றி உங்களுடன் பேச வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்கள் , பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே அதுவாகும்.

                      அண்மையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேச மாணவி வித்தியா என்பவர் 10 பேர் கொண்ட கும்பலினால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாணவியின் உயிர்? வாழ்க்கை??

                       ஆங்கில அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் "நான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நான் முழு நிர்வாணமாக வீதியில் நடந்து செல்லும் சூழலில் கூட உங்களில் யாருக்கும் என்னைக் கற்பழிக்கும் உரிமை இல்லை". இதுவே உண்மையும் கூட. பெண்ணியம் என்பதும் இதுதான். ஆனால் பெண்களுக்கு இவ்வாறானதொரு சூழல் நிலவுகிறதா என்றால் இல்லை.

                         முக நூலில் (facebook ) மாணவி வித்தியாவின் புகைப்படங்களை பகிர்வதும் ஆதரவு தருவதாக கூறிக்கொள்ளும் பதிவுகளை வெளியிடுவதும் தான் இன்றைய நிலவரமாக உள்ளது. அவர்கள் இதுதான் கடமை என்றோ அல்லது இத்தோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றோ எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கலாசார சீரழிவுகளின் ஆணிவேரை அழிப்பது குறித்து யாரும் அக்கறை செலுத்தவில்லை.

                           இனி பெண்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கே பெற்றோர் அஞ்சுவர். ஏன் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறியது? இதன் பின்னணி என்ன? இதன் தூண்டுகோல்கள் யார்? நீதிமன்றம் நீதியை நிலை நிறுத்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இதற்கெதிரான நமது குரல் ஒற்றுமையுடன் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

Comments

  1. வணக்கம்
    ஐயா.

    உண்மைதான் கவலையான விடயம்.... எல்லாவற்றுக்கும் எமது ஒற்றுமை முக்கியம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!