பாசத்தில் பாரபட்சம் - சரியா?

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

நான் அண்மையில் வாசித்த ஒரு செய்தி. பெற்றோரின் பாரபட்ச பாசம் காரணமாக 6 வயது தங்கையைக் கத்தியால் குத்திக் கொன்ற 13 வயது அக்கா. தன்னை விட தன் தங்கை  மீது அக்காளின் மனதில் முளைவிட்ட வன்மத்தின் கோர விளைவு இது. 

இச்சம்பவத்திற்கு பெற்றோரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறே இது. குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்களாகி விட்டால் அவர்கள் எல்லாவற்றையும் தாமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பருவத்தில் தாம் எப்படி இருந்தோம் என்பதை அந்தப் பெற்றோர் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

 

பெற்றோரின் பாசத்தின் மீதான எதிர்பார்ப்பு பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை இருந்து கொண்டே இருக்கும். இந்த வயதெல்லை ஆளுக்காள் மாறுபடலாம். அதனை கண்டறிந்து பாசம் காட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த வயதெல்லை இன்னும் அதிகமாகும். எல்லோருக்குமே தொட்டில் பருவத்தில் தாம் நடத்தப்பட்ட விதம் நினைவில் இருப்பதில்லை. அவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர்கள் அவற்றை நினைவில் கொள்வார்கள். எனவே பிள்ளைகளின் மனம் பக்குவப்படும் வரை பாசத்தின் அளவு மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

புதிதாக ஒரு பிள்ளை பிறந்ததும் அந்தப்பிள்ளையையே அதிகம் கவனிப்பதும் மூத்த பிள்ளையை கண்டுகொள்ளாமல் விடுவதும் மிகத் தவறு. அப்படியானால் எல்லாப் பிள்ளைகளும் இந்த மாதிரி கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்களா என நீங்கள் கேட்கலாம். எல்லோரும் கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால் நீங்கள் காட்டும் பாரபட்சத்தை நினைவில் இருத்திக் கொள்கிறார்கள். சமயம் வரும்போது கோபமாகவோ, சண்டையாகவோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். 

பாரபட்ச பாசமானது முதலில் ஏக்கமாகவும் பின்பு வன்மமாகவும் பிள்ளைகளின் மனதில் உருவெடுக்கிறது. இதுவே இக்கொலைக்கும் காரணமாகியிருக்கிறது. அனைத்துப் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. நமது பிள்ளைகளை எப்படி வளர்த்தோம் என்பதை அளவிட்டுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. பாரபட்ச பாசம் கொலையானதால் கதை வெளியாகியிருக்கிறது. இன்னும் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் வெளிவராத  எத்தனை எத்தனை கதைகள் இருக்குமோ யாரறிவார்?

பெற்றோர்களே இது உங்கள் தருணம். சிந்தித்து செயல்படுங்கள்.

நன்றி,
இப்படிக்கு

சிகரம்பாரதி.

Comments

  1. உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விசயம்தான்

    ReplyDelete
  2. உண்மைதான் மனதிலேயே வைத்து மருகிக் கொண்டு தன் இயல்பான நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்திருப்பவர்கள் அனேக முதல் குழந்தைகள்....

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  4. சிந்திக்கவைக்கும் பதிவு.

    இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!