Posts

Showing posts from July, 2014

போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .

Image
மே 18, 2009.                        தமிழர்களோ அல்லது தமிழர் நலனில் அக்கறையுள்ள எவருமோ இந்தத்திகதியை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்தகால யுத்தம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். வீதிகள் தோறும் சிங்களவர்கள் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு கொட்டும் மழையிலும் கூட வெற்றிக்களிப்பிலும் தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற ஆணவத்திலும் மிதந்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்த நாள். மறந்திருக்க மாட்டார்கள் தான் - ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்றபோதும் மறந்திருக்க மாட்டார்கள்தான்.                                   இலங்கையில் ஈழத்தமிழர் மற்றும் மலையகத்தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்து மூன்று தசாப்தங்களாகப் புரியப்பட்ட யுத்தம் ஈழத்தமிழ

தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. என் நெஞ்சம் தொட்ட காலத்தை வென்ற பாடலொன்றுடன் உங்களை சந்திக்கிறேன்.  நாம் தினமும் புதுப்புதுப் பாடல்களைக் கேட்கிறோம். அவற்றில் சில மனதைக் கவர்ந்தாலும் பழைய பாடல்கள் போல் மனதில் நீங்கா இடம்பெறுவதில்லை. சில பழைய பாடல்கள் நாம் முதல் முறை கேட்க நேரும்போது அது புது அனுபவம் தருவதாக அமைவதுண்டு. அப்படியானதோர் அனுபவத்தைத் தந்தது " ரோஜாவின் ராஜா " படப்பாடல்கள்.  கல்லூரி மாணவராக வரும் சிவாஜி கணேசனின் அருமையான நடிப்பை இப்பாடலில் காணலாம். பாடலுக்கான சந்தர்ப்பமானது இப்படி அமைகிறது. அனைத்துக் கல்லூரி கலைவிழா. இவரது கல்லூரி சார்பாக பங்கேற்கவேண்டிய மாணவர் வராததால் பலரும் கல்லூரியையும் கல்லூரி மாணவர்களையும் கேலி செய்ய மேடை ஏறுகிறார் சிவாஜி. கேலி செய்தவர்களை நோக்கி "சிரித்தது போதும் சிந்தியுங்கள்" என்று சொல்லி தொடங்குகிறார். கண்ணதாசனின் அருமையான வரிகளைக் கொண்டமைந்த பாடல். நடிகர் திலகத்தின் நடிப்பில் டி.எம்.எஸ் இன் கணீர் குரலில் அருமையாக வார்க்கப்பட்டிருக்கும் இப்பாடலை நீங்களும் ஒருமுறை ரசித்துப் பாருங்

உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்கள் அனைவரிடமும் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். அவசர உதவி. அதிலும் உதவியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது எல்லோரும் செய்யக் கூடியது. இரண்டாவது இயலுமானவர்கள் மனமிருந்தால் செய்யக் கூடியது. சரி. உதவி கோருவதற்கான காரணம்? காரணம் - இதுதான். எனது சகோதரன் [தம்பி] ஆகிய ஜனார்த்தனன் எதிர்வரும் 14  திகதி [ வரும் திங்களன்று ] இந்தியாவுக்கு மேற்படிப்புக்காக  செல்கிறார். இந்திய கலாசார மத்திய நிலையம் [ ICCR ] வழங்கும் புலமைப்பரிசில் வாயிலாக புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இப்போது அதற்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். 2014.07.14 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் இல் பயணமாக பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இனி முதலாவது உதவி. இது தகவல் உதவி. ஆம். எனக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பெற சில கேள்விகளை உங்கள் முன் வைக்க எதிர்பார்க்கிறேன். அவற்றுக்கு தக்க பதில் வழங்கி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தகவல்