மலேசிய விமானம் - தொடரும் மர்மங்கள்!
12 நாடுகளின் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் தீவிரத் தேடலில்...
அத்தனை பேரின் எண்ணங்களும் மார்ச் 08, 2014 அன்று காணாமல் போன மலேசிய விமானம் எங்கே என்பதில் தான். ஆறு நாட்கள் கடந்துவிட்டன. 239 பேரின் உறவுகள் கண்ணீரோடு காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ?
விபத்துக்குள்ளாகியிருக்கலாம், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம், கருந்துளைக்குள் சென்றிருக்கலாம், வேற்றுக்கிரக வாசிகளின் கைவரிசையாக இருக்கலாம் இப்படியாக பல்வேறு அனுமானங்கள். நாளாக நாளாக அனுமானங்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறதே தவிர விடை கிடைத்தபாடில்லை.
மேலே நீங்கள் காண்பது போலிக் கடவுச் சீட்டின் மூலம் குறித்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் இருவரினதும் புகைப்படங்கள். ஈரானியப் பிரஜைகளான இவர்கள் இருவரும் தீவிரவாதிகள் இல்லை என இண்டர்போல் செய்தி வெளியிட்டுள்ளது.
பீஜிங் விமானநிலையத்தில், விமானங்களின் வருகையைக் காட்டும் அறிவிப்புப் பலகையில் மேலே சிவப்பு நிறத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான வருகை தாமதம் என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. |
முழு உலகமும் விமானம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் இறங்கியுள்ள நிலையில் நாமும் அதையே பின்பற்றுவோம். விமானம் தொடர்பில் "சிகரம்" தொடர்ந்தும் அவதானத்துடன்.....
எந்தவித அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று வேண்டுகிறேன்...
ReplyDeleteஅவ்வாறே நினைப்போம்.
Delete