இலங்கையின் சுதந்திரத்திற்கு வயது அறுபத்தாறு!
வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரான அன்பான வணக்கங்கள்.
இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆயினும் மே மாதம் 22 ஆம் திகதி, 1972 இலேயே அதாவது 24 வருடங்களுக்குப் பின்னரே இலங்கை குடியரசாக்கப் பட்டது. அன்று முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அழைக்கப்பட்டு வருகிறது.
இன்று இலங்கையின் 66 வது சுதந்திர தினம். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆயினும் மே மாதம் 22 ஆம் திகதி, 1972 இலேயே அதாவது 24 வருடங்களுக்குப் பின்னரே இலங்கை குடியரசாக்கப் பட்டது. அன்று முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அழைக்கப்பட்டு வருகிறது.
1948 இற்குப் பின் இலங்கை பெற்ற சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டும் என்றாகிப் போனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடிய சிங்களவர்கள் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் மீது அடக்குமுறையினைப் பிரயோகித்தனர்.
இலங்கையின் முதலாவது சுதந்திர தின விழா. |
அந்த அடக்குமுறையானது 1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 இல் யுத்தத்தில் தோற்கடிக்கப் பட்டபின் தமிழர்கள் மீது மறைமுகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டு வருகின்றன. இதற்குப் பதில் இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இருந்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது. சுதந்திரம் என்ற பெயரில் தமிழர்கள் 66 வருடங்களாக அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி எப்போதென்று தெரியவில்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராட வேண்டுமா அல்லது அரசியல் வழியில் பயணிக்க வேண்டுமா என்பது குறித்த வாதப் பிரதிவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் மலையகத் தமிழர்கள் குறித்து வட பகுதித் தமிழர்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி கொஞ்சமும் கவலைப்படுவதாக இல்லை. அவ்வளவு ஏன், மலையக அரசியல் வாதிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால் வேறு என்ன சொல்ல?
வடக்கு அரசியல் வாதிகளும் வடமாகாண சபையைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரி என்பது போல நடந்துகொள்கின்றனர். மாகாண சபை என்பதும் ஓர் மத்திய அரசின் ஒரு அங்கமே என்பதைப் புரிந்து நடந்துகொண்டால் நல்லதுதான். வருடா வருடம் ஆயிரத்தெட்டு தினங்கள் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றன. அவற்றின் பட்டியலில் "தமிழர் விடுதலைத் திருநாள்" என்று இடம்பெறுமோ???
தமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராட வேண்டுமா அல்லது அரசியல் வழியில் பயணிக்க வேண்டுமா என்பது குறித்த வாதப் பிரதிவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் மலையகத் தமிழர்கள் குறித்து வட பகுதித் தமிழர்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி கொஞ்சமும் கவலைப்படுவதாக இல்லை. அவ்வளவு ஏன், மலையக அரசியல் வாதிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால் வேறு என்ன சொல்ல?
வடக்கு அரசியல் வாதிகளும் வடமாகாண சபையைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரி என்பது போல நடந்துகொள்கின்றனர். மாகாண சபை என்பதும் ஓர் மத்திய அரசின் ஒரு அங்கமே என்பதைப் புரிந்து நடந்துகொண்டால் நல்லதுதான். வருடா வருடம் ஆயிரத்தெட்டு தினங்கள் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றன. அவற்றின் பட்டியலில் "தமிழர் விடுதலைத் திருநாள்" என்று இடம்பெறுமோ???
தமிழர்களின் ஒற்றுமையின்மையே அவர்களின் மகா வெற்றி, வேறென்னத்தை சொல்ல, தமிழனுக்குள்ளேதானே துரோகிகள் இருக்கிறார்கள் !
ReplyDelete"தமிழர்களின் ஒற்றுமையின்மையே அவர்களின் மகா வெற்றி" - உண்மையான கூற்று. நன்றி.
Delete
ReplyDeleteஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் நடக்காது... என்னத்தை சொல்ல...? ம்...
உண்மைதான்.
Deleteசுந்திரம் பெற்றும் விடுதலை இல்லை. அரசியல் வாதிகள் நினைத்துப் பார்க்கவேண்டும்
ReplyDeleteஅரசியல் வாதிகள் அவர்களைப் பற்றி மட்டுமல்லவா நினைத்துப் பார்க்கிறார்கள்?
Deleteஒற்றுமை இல்லாததால் தமிழர்களின் மீது அடக்கு முறையை பிரயோகிக்கும் ,சிங்கள அரசை உலகநாடுகள் ஆப்பு வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது!
ReplyDeleteஆமாம் சகோ.
Deleteஇப்போது தமிழர்களை ஒன்று திரட்ட இன்னுமொரு தலைமை வேகத்தோடு தோன்ற வேண்டுமே....
ReplyDeleteஆம். அந்த தலைமைக்காகத்தான் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Delete