அன்புடன் 2014.
வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பட்டாசுகள், அலங்கார மின்விளக்குகள் என பணத்தை வாரியிரைத்துவிட்டு "இந்த வருஷம் செலவு குறையணும் கடவுளே" என்று பலரும் கடவுளை வேண்டியிருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நடந்தால் சரிதான்...
வருடத்தின் முதல் நாள் முடிந்து விட்டது. இனி பழையபடி வேலைத்தலங்களுக்கோ அல்லது பாடசாலைகள் அல்லது கல்லூரிகளுக்கோ கிளம்ப வேண்டியது தான். முதலாம் வகுப்பில் சேரப்போகும் மாணவர்களுக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கும் இரண்டாம் திகதி முக்கியமான தினம். அவர்களை வாழ்த்துவோம்.
மேலும் வலைத்தளத்திற்கு ஒரு வாரகால விடுமுறையையும் எடுத்துக்கொள்ளவிருக்கிறேன். ["நீ ஏற்கனவே வாரத்துக்கு ஒரு முறை எழுதுறவன் தானே?" என்பவர்களுக்கு 100 கசையடிகள் வழங்கப்படும்.] காரணம், எனது பாட்டி - அதாவது - அம்மாவின் அம்மா இறந்துவிட்டார். 2014.01.01 அன்று மாலை 5 மணியளவில் மரணமானார். கடந்த ஒரு மாதகாலமாக கடும் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருக்கு "சிகரம் வலைத்தளம்" ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது. நான் தற்போது கொழும்பில் இருக்கிறேன். நான்கரை மணிநேரப் பிரயாணத்தை மேற்கொண்டு ஊருக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் புதுத்தெம்போடு உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை "சிகரம்" வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.
நன்றி.
இப்படிக்கு
உங்கள் அன்பின்
சிகரம்பாரதி.
பாட்டிக்கு இரங்கல்கள்...
ReplyDeleteஆனால் நீங்கள் அதைப்பற்றிய கவலை அதிகமில்லாமல் ஜாலியாக இருப்பது போல இருக்கு...
டேய் உங்களுக்கெல்லாம் இந்த வருஷம் பொங்கலே கிடையாதேடா என்கிற விவேக் காமெடி தான் நினைவுக்கு வருகிறது...
அருமையான கருத்து. நன்றி.
Deleteஎன்னது சிவாஜி செத்துட்டாரா ?
Deleteஉடல் இறந்திருக்கலாம். நினைவுகள் இறப்பதில்லை.
Deleteபாட்டியின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.பகிர்வு ஜாலியான கலாய்ப்பு:)))
ReplyDeleteநன்றி.
Deleteபாட்டிக்கு இரங்கல்கள்...
ReplyDeleteநன்றி.
Deleteஎங்களது இரங்கல்கள்.....
ReplyDeleteநன்றி.
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி.
Delete
ReplyDeleteவணக்கம்!
திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!
பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் அருமையான கவிக் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete