அகவை எட்டில் தடம் பதிக்கும் "சிகரம்" !
"சிகரம்" வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் சிகரம்பாரதியின் பணிவான மற்றும் அன்பான வணக்கங்கள் உரித்தாகட்டும். பொருளாதார சிக்கல் மற்றும் பல காரணிகள் காரணமாக வலைத்தளத்தினை இடைவிடாது நடாத்திச் செல்ல இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 2013 ஆம் ஆண்டுக்கு இது தான் இரண்டாவது பதிவு. அதுவும் முக்கியமான பதிவு.
இதே போன்றதொரு ஜூன் - முதலாம் நாளில் தான் எனது சுய முயற்சியில் உருவான "சிகரம்" கையெழுத்துச் சஞ்சிகை ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. இந்த வலைத்தளம் உருவாகவும் அதுதான் அடிப்படை. ஆகவே "சிகரம்" அகவை ஏழினை நிறைவு செய்து அகவை எட்டில் கால் பதிக்கிறது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் இங்கு கூற விழைகிறேன். அந்த நாளை நினைவு கூர்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான். இதே நாளில் "சிகரம்" வலைத்தளத்தில் கடந்த வருடம் நான் இட்ட பதிவு இதோ:
அந்த பதிவில் நான் முக்கியமான தவறொன்றை இழைத்திருப்பதை நான் தற்போது தான் அவதானித்தேன். பாடசாலைக் காலத்தில் சரியாக 100 இதழ்களை கையெழுத்திலேயே தயாரித்து வெளியிட்டிருந்தேன். "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையின் முதலாவது இதழ் மட்டும் "ஆனந்த கேசரி" என்ற மகுடத்தில் வெளியாகியிருந்தது. இரண்டாம் இதழில் இருந்தே "சிகரம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. கடந்த ஆண்டு வெளியிட்ட பதிவில் "ஆனந்த கேசரி" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "உதய சூரியன்" என்று குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்க வேண்டும் தோழர்களே.
என் சாதனைகள் அனைத்திற்கும் இதுவரை காலமும் நீங்கள் அனைவரும் உறுதுணையாய் இருந்தமைக்கு நன்றிகள் பல. எதிர்காலத்திலும் என் கனவுகளெல்லாம் நிஜமாகும் நேரத்தில் என்னோடிருந்து வாழ்த்த வேண்டுமென்று உளமார வேண்டுகிறேன். பேச வேண்டியவை அதிகமிருந்தாலும் நேர நெருக்கீடு என் வார்த்தைகளைக் குறுக்கீடு செய்கிறது. ஆகவே மேலதிக விபரங்களுடன் உங்களை நாளை வந்து சந்திக்கிறேன்.
அன்புடன்,
சிகரம்பாரதி.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடரவும் வாழ்த்துக்கள்...
முதல் ஆளா வந்து வாழ்த்தினதுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்தும் வாருங்கள்.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழரே.
Deleteவாழ்த்துகள் நண்பரே.....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழரே. தொடர்ந்தும் வாருங்கள்.
ReplyDeleteஎட்டு வருடமாகவா வலைப்பதிவு நடத்துகின்றீர்கள்...வாழ்த்துக்கள் ஒரு வருடம் நடத்தியே நான் இனியும் தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்கிறேன்
ReplyDeleteவலைப் பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகிறது. ஏழு வருடங்களுக்கு முன் நான் பாடசாலையில் கல்வி கற்கும் போது 4 வருடம் 'கையெழுத்து சஞ்சிகை' நடத்தினேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வலைப் பதிவை விட்டு விடாதீர்கள். வேண்டுமானால் மாற்றங்களைச் செய்து தொடருங்கள். நன்றி தோழரே.
Deleteஎட்டாம் வருட பயணத்திற்கு வாழ்த்துகள் நண்பா... இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகள்...
ReplyDelete