வேலைக்கு போறேன்!

நாளைக்கு நான் வேலைக்கு 
போறேன் நண்பர்களே!
பத்துச் சாமான் சுத்திக்குடுத்து 
பத்துரூபா சம்பாதிக்கப் 
போறேன் நண்பர்களே 
குடும்பத்துல கஷ்டமுங்க 
கல்விக்குக் காசில்லிங்க 
கனவெல்லாம் கலைஞ்சுடுச்சு 
நாடகமும் முடிஞ்சிருச்சு 
அடுத்த வேஷமும் போட்டுக்கத்தான் 
நேரமும் வந்துருச்சு 
படிக்கப் பிடிக்கலே 
பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு 
வாழப் பிடிக்கலே 
வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு 
நல்லாச் சொன்னிங்க சிநேகிதர்களே 
பொழைக்கத் தெரியாதவன் இவன்னு 
பொழைக்கத்தானுங்க போறேன் 
போய்ட்டு வாறேன் தோழர்களே!



                                            

இக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான "சூரியகாந்தி" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும்.  

வேலைக்கு போறேன்!  
https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html  

Comments

  1. இதனை மழையக இளைஞர்களை எண்ணி நீங்கள் எழுதியிருந்தாலும் இது நாடு முழுவதிலுமுள்ள இரு பாலாருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்...

    வலிகூடிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நண்பரே. வலிக்கு நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி உள்ளமே.

      Delete
  2. அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  3. நிதர்சனமான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  4. நல்லதொரு கவிதை.மலையகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்.அந்த உறவுகள் மனதில் முகம் காட்டுகிறார்கள் !

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் மலையகமா? முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  5. நல்ல கவிதை!
    என் வலைப்பூ வில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்) மறக்காம படிங்க.
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  6. முதல் வருகை தொடர் வருகையாகட்டும்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

    ReplyDelete
  7. சிறப்பாக குழந்தை தொழிலாளர்கள் கஷ்ட்டத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். தொடருங்கள்.

    படிக்கப் பிடிக்கலே
    பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு
    வாழப் பிடிக்கலே
    வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு

    சிறப்பான வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. அவர்களின் கஷ்டத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கவிதையின் நோக்கம். நன்றி உள்ளமே.

      Delete
  8. மனதைத் தொட்ட கவிதை. நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  9. "படிக்கப் பிடிக்கலே
    பள்ளிக்கூடத்தை பிடிச்சிருக்கு
    வாழப் பிடிக்கலே
    வாழ்க்கையைப் பிடிச்சிருக்கு"
    கவிதை வரிகள் அனைவருக்கும் பொருந்தும்தானே.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!