அகவை ஏழில் தடம் பதிக்கும் 'சிகரம்'






2006 - ஜூன் முதலாம் திகதி. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதமான ஒரு நாள். இன்று நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் 'சிகரம்' வலைத்தளம் உருவாகவும் அந்த நாள் தான் காரணம். 'அப்படி என்ன இருக்கிறது அந்த நாளில்?' - இப்போது இது தான் உங்கள் கேள்வியாக இருக்கும். சொல்கிறேன்.

2006 இல் நான் க.பொ.த - சாதாரண தரத்தில் (தரம் -11) கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே ஒரு கையெழுத்துப் பத்திரிகையை தயாரித்து வெளியிட எண்ணினேன். அதன் படி 2006 ஜனவரி முதல் 'சரஸ்வதி' எனும் நாமத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டேன். ஆனால் அது அதிகளவான மாணவ வாசகர்களைச் சென்றடையவில்லை. எனவே எல்லோரையும் கவரும் வகையில் எனது கையெழுத்து சஞ்சிகை அமைய என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் இலக்கிய சஞ்சிகையை விடுத்து செய்திச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.
    அந்த முடிவின் பிரகாரம் 2006 ஜூன் முதலாம் திகதியன்று 'உதய சூரியன்' என்ற மகுடத்தில் எனது கையெழுத்து செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தேன். 2006 - ஜூன் - 08 முதல் அதாவது இரண்டாவது இதழில் இருந்து ' சிகரம்' என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டேன். நான்கு வருடங்கள் தொடர்ந்து 'சிகரம்' கையெழுத்து செய்திப் பத்திரிகையை வெளியிட்டேன். சரியாக 100 இதழ்களை வெளியிட்டிருந்தேன். 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையை நடத்திய காலப் பகுதியை மனதுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் ஒரு உற்சாகம் தோன்றும்.

'சிகரம்' சஞ்சிகையை ஆரம்பித்த பின்னர் தான் 'சிகரம் பாரதி' எனும் புனை பெயரையும் சூடிக் கொண்டேன். எனக்கு பாடசாலைக் கல்வியை விட ' சிகரம்' கையெழுத்துப் பத்திரிகைக்கான விடயங்களை தேடி எடுத்தல், தயார் படுத்தல், வெளியிடல் போன்றவற்றில் தான் ஆர்வம் மிகுந்திருந்தது. நேர காலம் மறந்து நூலகத்திற்குள்ளேயே கூடு கட்டிக் கொள்வதுமுண்டு. 

க.பொ.த உயர் தரத்திற்கு வந்த பின்னர் ( தரம் - 12) வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர் ஒளி போன்ற பத்திரிகைகளுக்கும் பின்னர் அவற்றோடு ஞானம், மறு பாதி, நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் மட்டுமின்றி எனது நண்பர்களையும் எழுத வைத்து அவர்களிடமிருந்து ஆக்கத்தினைப் பெற்று நானே தபாலிட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகும் படி செய்தேன். 



பாடசாலைக் காலத்தின் பின்பு உரியளவு வாசகர்கள் இல்லாத காரணத்தினால் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்தினேன். அதன் பின்னரே 'தூறல்கள்' வலைப் பதிவினை ஆரம்பித்தேன். ஆனால் அதனையும் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் 'சிகரம்' வலைத்தளத்தின் சேவை ஒரு போதும் நிற்காது. எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


எதிர் காலத்தில் வீரகேசரி, தினக்குரல் போலவோ அல்லது ஆனந்த விகடன் போலவோ ஆலமரமாய் 'சிகரம்' ஒரு மாபெரும் ஊடக நிறுவனமாக மாறி வேர் விட்டு நிற்க வேண்டும் என்பதே என் ஆசை - அவா. மனதுக்குள் ஒரு மாபெரும் கனவைச் சுமந்தபடி பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் எனது இலக்கை அடைந்து விடுவேன் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. அது வரை என் மூச்சும் என் எழுத்தும் ஒரு போதும் நிற்காது. எனது அடுத்த தரிப்பிடம் 'சிகரம்' இன் அகவை 8 இல் - அதாவது - 2013 - ஜூன் 01 இல் தான். மலர்ந்துள்ள 'சிகரம்' ஆண்டினை  மகிழ்ச்சியுடன் வரவேற்போமாக.

சிகரம்பாரதி 

Comments

  1. உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உள்ளமே. நிச்சயம் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. நீங்கள் எல்லோரும் உறுதுணையாய் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம் உள்ளமே.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!